நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, September 25, 2006

பழக்கம்

புறாக்களின் தோட்டத்துக்குப் போவது உறுதியானதும்
தேடிச் சேகரித்துக் கொஞ்சம் சுமந்துபோகிறேன்
நெல்மணிகளையும் இன்னும் சில தானிய எடைகளையும்

சூரியனைக் கருமேகங்கள் குடித்திருக்க
கூட்டமாய்த் தென்படுகின்றன புறாக்கள்
உலோபியிடமிருந்து விழும் காசாய்
பிரயத்தனப்பட்டுச் சொட்டும் ஓரிரு துளிகளில்
சிறகுகள் சிலிர்க்க மண்கீறுபவையாகவும்
கிடைத்த எதையோ தலைகுத்தி ஆய்பவையாகவும்
மிரளும் கண்களால் என் நுழைவை நோக்குபவையாகவும்
கலந்து நிற்கும் புறாக்கூட்டத்தின் முன்
தானியங்களைத் தூவி எறிகிறேன்
பொறுக்க அழைக்கும் தோரணையில்

பறந்தெழுந்துபோய்த் தூறும் துளிகளுக்குச் சிறகுகொடுத்து
குறுகி நிற்கிறது ஒற்றைப்புறா
கொத்தித் திங்கும் கூட்டத்திலிருந்து விலகி

நாளைமுதல் இங்கு வரப்பழகவேண்டும்
தானியங்களைப் பைகளில் அடைத்துக்கொண்டுவராத
கொஞ்சம் வெறும் நானாகவும்

5 Comments:

At 5:04 AM, September 25, 2006, Blogger அருள் குமார் said...

அருமையாய் இருக்கிறது செல்வநாயகி.

வெறும் நாமாக இருக்க, பழகவேண்டிய வேதனையான சூழல் நமக்கு!

 
At 6:54 PM, September 25, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி அருள்.

 
At 3:44 AM, September 26, 2006, Blogger கசி said...

கவிதை என்றாக இருக்கிறது செல்வநாயகி.

 
At 10:49 AM, September 26, 2006, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

கவிதை அழகு! கண்முன் விரிகின்ற காட்சிகளும், அக்காட்சிகள் எழுப்பும் சிந்தனைகளும் பொருத்தமாய் கச்சிதமாய்ச் சொல்லும் கவிதை.

 
At 9:29 PM, September 26, 2006, Blogger செல்வநாயகி said...

ராதாராகவன், செல்வராஜ்,

உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.

 

Post a Comment

<< Home