நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, July 10, 2009

சமூக உணர்வு




பதின்மம் முளைவிட்டிருந்தபோதுதான்
அவனைக் கல்லால் அடித்துத் தெறித்த‌
குருதியைக் கண்களால் குடித்திருந்தேன்
இரவில் சீதை ஒருவளை வேசியாக்கி
பகலில் குன்றேறி ஏகபத்தினிவிரதம்
உரைத்தவனைக் கல்லால் அடிப்பதே
நீதியென்று ராமன் கிருஷ்ணன் சிவன்
சீனிவாசன் எல்லோருக்கும் சொல்லியும் வைத்தேன்

அன்றோடு பதினேழு முடிந்ததென்று
அம்மா சொன்ன திகதியில்கூட‌
உள்ளூர் தபாலலுவலகத்தில்
உதவித்தொகை கேட்டு நின்ற கிழவியை விட்டு
பொண்டாட்டியோடு தொலைபேசியில்
கொஞ்சிக்கொண்டிருந்த அலுவலனை
சட்டை பிடிக்கப்போனேன்
எனக்கான "ரௌடி" பெயரை
ஊருக்குள் முன்மொழிந்தவன் அவனாகத்தான் இருக்கவேண்டும்
நான் புளிய‌ம‌ர‌த்துக் க‌ல்லுக்க‌டைப்ப‌க்க‌மாய் ந‌ட‌ந்துபோகையில்
குடிகார‌ன்க‌ளும் அவ‌ச‌ர‌மாய் வ‌ரிசையமைத்தார்கள்
அஞ்சு பைசா சில்ல‌ரை பாக்கிக்கு ந‌ட‌த்துன‌ரோடு
பேர் இல்லாத‌துக்கு ஓட்டுச்சாவ‌டியாட்க‌ளோடு
எதிரில் வ‌ந்த‌ எம் எல் ஏவோடு
யாருக்காக‌வேனும் எப்போதும்
ச‌ண்டையிட்டேன்


ஏழெட்டு வேலை, ஊர் மாற்றீ
இன்று அந்த முனீஸ்வர‌ன் கோயிலருகே
ஒரு பைத்திய‌த்தை நாலுபேர்
அடித்துக்கொண்டிருக்க‌ நான்
வேகமாகக் கடந்துகொண்டிருக்கிறேன்
சாலையையும் அனைத்தையும்

6 Comments:

At 10:15 PM, July 10, 2009, Blogger மதன் said...

வாழ்த்துக்கள் செல்வநாயகி.. கவிதை எனக்குப் பிடித்தது!

 
At 3:34 AM, July 12, 2009, Blogger பதி said...

நன்றாக உள்ளது...

 
At 10:41 AM, July 13, 2009, Blogger செல்வநாயகி said...

மதன், பதி,

என்னளவில் இது சரியாக சிந்தித்து எழுதப்படாத ஒன்று (அதுசரி எல்லாத்தையும் சரியா செஞ்சனா என்ன?) வேறெதையோ நினைத்து எழுத ஆரம்பித்து இடையில் ஏற்பட்ட தடங்கல்களால் இப்படி முடிந்தது இது:))

இருந்தாலும் உங்கள் இருவருக்கும் பிடித்ததறிந்து மகிழ்ச்சிதான்:)) நன்றி.

 
At 10:46 AM, July 16, 2009, Blogger நேசமித்ரன் said...

பொறி பறக்கிறது உங்கள் வரிகளில்
நன்றாக இருக்கிறது உட்பொருளின் தீவிரம்..!

 
At 4:36 AM, January 15, 2010, Blogger baskar said...

என் சிறு அறிவுக்கு எட்டிய வரை வரலாற்ற்றில் ஒரு பெண் கலகக்காரி கூட இல்லையே என்ற மன வருத்தம் உண்டு அது என் அறிவு போதாமையாக இருக்கலாம்.இந்த அளவுக்கு கேவலமாக ஆண்கள் இவர்களை அடக்கி வைத்திருக்கிறார்களே ஏன் இதனை ஆயிரம் ஆண்டுகளாக ஒருவருக்கு கூட கோபம் வரவில்லை என்று அத்சயதிருகிறேன் .இப்போது சிறிது மாறி இருப்பது மகிழிச்சி அளிக்கிறது .உங்களின் வினவு மீதான விமர்சனத்தை படித்தேன் .பெண்கள் இந்த அளவு கருத்து ரீதியாக விமர்சனம் செய்வது ஆச்சர்யத்தையும் மகிழிசியையும் அளித்தது .தொடர்ந்து நீங்கள் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் அது மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும், ஊக்கத்தையும் அளிக்கும் என்பது என் விருப்பம் .தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .

 
At 12:46 AM, August 30, 2010, Blogger ஜோதிஜி said...

வரலாற்ற்றில் ஒரு பெண் கலகக்காரி கூட இல்லையே என்ற மன வருத்தம் உண்டு

கண்ணகி மாதவி இதை கொண்டு வர முடியும் அல்லவா?

 

Post a Comment

<< Home