நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, February 04, 2010

சூரியனைக் கொன்ற இரவு




கடிகார முட்களுக்கு நடுவே எண்களை எண்ணிக்கொண்டிருக்கும்
நாளின் எந்த இடைவெளியிலும்
இயல்பாய் என் நினைவுகளில் இறங்குகிறதுன்பாதை
பொட்டல் வெளியெங்கும் கருவேலமரங்களெனப்
பசுமை தொலைத்த இக்கோடையில்
மழைக்கான நம்பிக்கையாய்ச் சித்திரைப்பூச்சி நீ
உன் கத்தல் காது நிறைக்கிறது
செடிகளையல்ல மரங்களையே தொட்டிகளில் வளர்த்துக்
காட்சிப்படுத்தி விடமுடியும் வீதிகளில்
நீ கொண்டலையும் வனக் கனவுகள்
சிதறி விழுகின்றன என் விரித்த கைகளில்

போர் தொடுப்பதான பாவனையில்
ஒவ்வொரு சந்திப்பிலும் கடந்துபோதல் எதற்கென
பலாப்பழத் தோல் பிளந்து
சொல்லிவிடலாம்தான் நேசத்தை
பிறகு புலரும் பொழுதொன்றில்
உன் மாயச்சந்துகளிலிருந்தும் நீளும்
எசமானக் கயிறொன்று
என்னை அடிமையாய்க் கேட்கும்
வேண்டாம் இப்படியே இருப்போம்
சூரியனைக்கொன்ற இரவில்
நட்சத்திரங்கள் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன

15 Comments:

At 11:03 PM, February 04, 2010, Blogger செல்வநாயகி said...

படத்துக்கு நன்றி:-

dreamsview.net

 
At 1:27 AM, February 05, 2010, Blogger சந்தனமுல்லை said...

/சொல்லிவிடலாம்தான் நேசத்தை
பிறகு புலரும் பொழுதொன்றில்
உன் மாயச்சந்துகளிலிருந்தும் நீளும்
எசமானக் கயிறொன்று
என்னை அடிமையாய்க் கேட்கும்/

என்னாலே இதை புரிஞ்சுக்க முடியுது,செல்வநாயகி! ரசித்தேன்!

 
At 4:11 AM, February 05, 2010, Blogger கோமதி அரசு said...

நட்சத்திரங்கள் ஒளிரும் இரவு அழகு.

செல்வநாயகி,உங்கள் கவிதை அழகு.

 
At 8:20 AM, February 05, 2010, Blogger நேசமித்ரன் said...

//சொல்லிவிடலாம்தான் நேசத்தை
பிறகு புலரும் பொழுதொன்றில்
உன் மாயச்சந்துகளிலிருந்தும் நீளும்
எசமானக் கயிறொன்று
என்னை அடிமையாய்க் கேட்கும்//

இந்த வரிகளை என் தளத்தில் ஒட்டிக் கொண்டேன் நன்றி

:)

 
At 8:31 AM, February 05, 2010, Blogger முத்துகுமரன் said...

கவிதைகள் வாசிக்கும் கணங்களெல்லாம்
கவனமாகவே மறைக்க வேண்டியதாயிருக்கிறது
அடையாளங்கள் அகப்பட்ட
சொற்களின் மர்மங்களுக்குள்
அந்தரங்களை ருசிக்கும்
குரூரங்களின் சிதைவுகளை!

 
At 5:45 PM, February 05, 2010, Blogger Thekkikattan|தெகா said...

ம்ஹும் , அரைகுறையாத்தான் புரிஞ்சுது. இருந்தாலும், பின்னூட்டங்களில் ஹைலைட் பண்ணப்பட்ட வரிகள் பசக்கின்னு புரியுது...

 
At 5:48 PM, February 05, 2010, Blogger செல்வநாயகி said...

முல்லை, கோமதி அம்மா, நேசமித்ரன், முத்துக்குமரன்,

உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.

 
At 6:18 PM, February 05, 2010, Blogger செல்வநாயகி said...

தெகா,

:)) நன்றி.

 
At 7:06 PM, February 05, 2010, Blogger sathishsangkavi.blogspot.com said...

//போர் தொடுப்பதான பாவனையில்
ஒவ்வொரு சந்திப்பிலும் கடந்துபோதல் எதற்கென
பலாப்பழத் தோல் பிளந்து
சொல்லிவிடலாம்தான் நேசத்தை //

நல்லாயிருக்கு....

 
At 10:00 PM, February 05, 2010, Blogger settaikkaran said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்குன்னு தான் சொல்லணும். ஏன்னா மத்தவங்க அப்படித்தான் சொல்லியிருக்காங்க! புரிஞ்சவங்களே நல்லாயிருக்குன்னு சொல்லும்போது புரியாத நான் வேறென்ன சொல்லப்போறேன்? நல்லாயிருக்குங்க! :-))

 
At 10:24 PM, February 06, 2010, Blogger செல்வநாயகி said...

சங்கவி நன்றி.
சேட்டைக்காரன்,
உங்கள் விமர்சனம் நன்று:))

 
At 8:28 AM, February 08, 2010, Blogger ரௌத்ரன் said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க :)

 
At 11:12 AM, February 08, 2010, Blogger செல்வநாயகி said...

ரௌத்ரன் நன்றி.

 
At 4:56 AM, February 18, 2010, Blogger உயிரோடை said...

க‌விதை ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து. சூரிய‌னை கொன்ற‌ இர‌வு வித்தியாச‌மான‌ சிந்த‌னை

 
At 8:41 AM, February 18, 2010, Blogger செல்வநாயகி said...

நன்றி உயிரோடை.

 

Post a Comment

<< Home