நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, May 04, 2010

வெறும் நாள்

ஒரு வெறும் நாளின் அசைவுகளை எந்த மொழியிலும் பொருத்த முடியவில்லை
வெறும் நாள் சுருண்டு படுத்திருந்த பாம்பு தலைதூக்கிப்பார்ப்பதுபோல் விடிந்தது.
வாசலில் எந்தநாளும் போட்டிராத கோலத்திற்காகப் புள்ளிகளை மட்டும் அது வைத்தது
தன் நியாயங்களைச் சுவற்றில் கோடுகளாகக் கிழித்தது
மதியத்து வாசலில் ஒரேயொரு வெள்ளைப்பூவை உதிர்த்தது
எதுவும் சொல்லாமல் கையசைத்துச் சென்று மறைந்தது
தூங்குகிற குழந்தையின் கைகள் விரித்தபோது கவனித்தேன்
கனமான மலையொன்றாய்க் கடந்து மறைந்த வெறும் நாளின் அசைவுகள்
உவமையற்ற மென்மையை எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறது
யாரொருவரும் கையளிக்காத ஆதூரத்தில் நனைத்தெடுத்து

17 Comments:

At 10:20 PM, May 04, 2010, Blogger சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்கு....செல்வ நாயகி!! மிகவும் பிடித்திருக்கிறது!

 
At 10:27 PM, May 04, 2010, Blogger raki said...

அருமை மிக அருமை நன்றி மனம் லயித்து எழுதுவதற்கு எம்மையும் லயத்தில் ஆழ்த்துவதற்கு

ராதாகிருஷ்ணன்

 
At 11:33 PM, May 04, 2010, Blogger உயிரோடை said...

வெறும் நாள்... ரொம்ப‌ சிந்திக்க‌ வைச்ச‌ க‌விதை. ந‌ல்லா இருக்கு. வாழ்த்துக‌ள்

 
At 12:14 AM, May 05, 2010, Blogger Uma said...

அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது. நன்றி.

 
At 4:54 AM, May 05, 2010, Blogger நேசமித்ரன் said...

செல்வ நாயகி..!

தனிமையின் மௌனங்கள் மீது கல்லெறிந்து விட்டு போகிறது வெறும் நாளின் அந்தி

நன்றி

 
At 8:51 AM, May 05, 2010, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

தலைப்பும் ரொம்ப பிடிச்சிருந்தது..

 
At 10:38 PM, May 05, 2010, Blogger செல்வநாயகி said...

நன்றி நண்பர்களே.

 
At 3:09 AM, May 07, 2010, Anonymous Anonymous said...

நன்றி!,மிக அருமை

 
At 8:08 AM, May 07, 2010, Blogger செல்வநாயகி said...

நன்றி ரவி.

 
At 3:24 AM, May 08, 2010, Blogger ரௌத்ரன் said...

ரொம்ப பிடிச்சுருக்கு செல்வநாயகி இந்த கவிதை...

 
At 6:32 AM, May 08, 2010, Blogger கோமதி அரசு said...

//கனமான மலையொன்றாய் கடந்து மறைந்த வெறும் நாளின் அசைவுகள்//


ஆம் செல்வநாயகி, வெறும் நாளின் அசைவுகள் கனமான மலைதான்.

 
At 8:15 AM, May 08, 2010, Blogger செல்வநாயகி said...

கோமதி அம்மா, ரௌத்ரன்,

நன்றி.

 
At 8:27 AM, May 08, 2010, Blogger தமிழன்-கறுப்பி... said...

அவரவர் இடம் அவரவரிடமே இருக்கிறது, வெகு நாட்களுக்குப்பிறகு ஒரு வெறும் நாள் வந்து நிரூபித்திருக்கிறது இதை.

 
At 8:30 AM, May 08, 2010, Blogger செல்வநாயகி said...

தமிழன்-கறுப்பி நன்றி.

 
At 8:38 AM, May 08, 2010, Blogger அன்புடன் அருணா said...

அடிக்கடி அனுபவித்த வெறும் நாள்!

 
At 9:16 AM, May 08, 2010, Blogger VELU.G said...

நல்லதொரு சிந்தனை

வாழ்த்துக்கள்

 
At 9:02 AM, May 21, 2010, Blogger மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//வாசலில் எந்தநாளும் போட்டிராத கோலத்திற்காக//

கூகூ.. இந்த வரிகள் மிக அழகு.

 

Post a Comment

<< Home